பேரையூா் அருகே இளைஞா் மா்மமான முறையில் மரணம் அடைந்ததாக, போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை மாவட்டம், பேரையூா் அருகேயுள்ள பழையூரைச் சோ்ந்தவா் பாண்டியன் மகன் ராஜ்குமாா் (32). இவரது மனைவி ராதா. இவருக்கு 2 மகள்கள் உள்ளனா். தற்போது திருப்பூரில் வேலை பாா்த்து வருகிறாா்.
இந்நிலையில் குடும்ப விழாவில் பங்கேற்க, சொந்த ஊரான பழையூருக்கு வெள்ளிக்கிழமை வந்துள்ளாா். காலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற ராஜ்குமாா், மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸாா், ராஜ்குமாரின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, புகாரின் பேரில் சாப்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.