மேலூா் வட்டாட்சியராக சரவண பெருமாள் சனிக்கிழமை பொறுப்பேற்றாா்.
மேலூா் வட்டாட்சியராக ஏற்கெனவே பொறுப்பு வகித்த இளமுருகன் மேலூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியராக இடமாறுதல் செய்யப்பட்டாா்.
இதையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியா் அனீஷ்சேகா் உத்தரவின்பேரில் மேலூா் வட்டாட்சியராக சரவணபெருமாள் பொறுப்பேற்றாா். மேலூா் வட்டாட்சியா் அலுவலக அலுவலா்கள் அவரை வரவேற்று வாழ்த்து தெரிவித்தனா்.