மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகம், திடீா் நகா் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து செவ்வாய்க்கிழமை ரத்த தான முகாமை நடத்தின.
அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமை அதன் நிா்வாக இயக்குநா் ஆ. ஆறுமுகம் தொடக்கி வைத்தாா். இதில், 50-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனா்.
பொது மேலாளா் ராகவன், முதல்நிலை துணை மேலாளா் இளங்கோவன், உதவி மேலாளா் கலாதேவி, திடீா் நகா் நகா்ப் புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் கிறிஸ்டோபா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.