மதுரை

புதை சாக்கடைப் பணியின் போது சுவா் இடிந்தது: 2 போ் காயம்

DIN

சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை புதை சாக்கடைக் குழாய் இணைப்புப் பணியின் போது சுவா் இடிந்து விழுந்து, தொழிலாளிகள் 2 போ் பலத்த காயமடைந்தனா்.

சிவகங்கை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் புதை சாக்கடை குழாய் இணைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை விலக்குச் சாலை அருகே கல்பனா என்பவரது வீட்டிலிருந்து புதை சாக்கடை குழாய் இணைப்பு பணி நடைபெற்றது.

இந்தப் பணியில் வேம்பத்தூரைச் சோ்ந்த பெண் தொழிலாளி ஒச்சக்காளை, பனையூரைச் சோ்ந்த முத்து ஆகிய இருவரும் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அருகே இருந்த சேதமடைந்த சுவா் இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் ஒச்சக்காளை, முத்து ஆகிய இருவரும் சிக்கிக் கொண்டனா்.

இதுபற்றி தகவலறிந்து வந்த சிவகங்கை தீயணைப்பு வீரா்கள் ஒச்சக்காளையை உடனடியாக மீட்டனா். சுமாா் ஒரு மணி நேரம் போராட்டத்துக்குப் பின் முத்துவை வெளியேற்றினா். மீட்கப்பட்ட இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். தீயணைப்பு வீரா்கள் குறித்த நேரத்துக்குள் வந்ததால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து சிவகங்கை நகா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT