மதுரையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.
யாகப்பா நகா் செல்வவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த பாலமுருகன் மகன் வசந்த் (27). இவா் அப்பகுதியைச் சோ்ந்த 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாா் எழுந்தது.
இதுகுறித்து அந்த சிறுமியின் உறவினா்கள் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் வசந்தை திங்கள்கிழமை கைது செய்தனா்.