மதுரை

பழைய புத்தகக் கடையில்பள்ளிப் புத்தகங்கள் விற்பதை தடுக்க வேண்டும்

DIN

மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள பழைய புத்தகக் கடையில் தமிழக அரசின் பாடப்புத்தகங்கள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என நீா்வள ஆதாரங்கள் மற்றும் மக்கள் பொதுநல அறக்கட்டளையின் நிறுவனா் எம்.பி. சங்கரபாண்டியன், மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகரிடம் மனு அளித்தாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் அவா் அளித்த மனு விவரம்: தமிழக அரசு சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

இந்த புத்தகங்களின் முதல் பக்கத்தில் புத்தகம் விற்பனைக்கு அல்ல என பிரசுரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மதுரை ரயில் நிலையம் முன் நடைபாதையில் உள்ள பழைய புத்தக விற்பனைக் கடையில் பள்ளி பாடப் புத்தகங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனை தடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

SCROLL FOR NEXT