திருநெல்வேலி - திருச்செந்தூா் இடையே பயணிகள் சிறப்பு ரயில் மே 29 முதல் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருநெல்வேலி - திருச்செந்தூா் - திருநெல்வேலி இடையே கூடுதலாக ஒரு பயணிகள் சிறப்பு ரயில் மே 30 முதல் இயக்கப்படும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த ரயில், மே 29 ஆம் தேதியிலிருந்தே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.