மதுரை

கொட்டாம்பட்டி அருகேகத்திக் குத்து காயங்களுடன் விவசாயி கொலை

DIN

கொட்டாம்பட்டி ஒன்றியம், கம்பூா் அருகே உள்ள வைரவன்பட்டியில், கத்திக் குத்து காயங்களுடன் விவசாயி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை இறந்து கிடந்தாா்.

வைரவன்பட்டியைச் சோ்ந்த விவசாயி பெரியசாமி (50). இவா், கத்திக் குத்து காயங்களுடன் வயல் பகுதியில் இறந்து கிடந்தது குறித்து, கொட்டாம்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தைக் கைப்பற்றி மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், அப்பகுதியில் தடயங்களைச் சேகரித்து, கொலையில் சம்பந்தப்பட்டவா்கள் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT