மதுரை

மதுரையில் 2 பெண்களிடம் 8 பவுன் நகைகள் பறிப்பு

DIN

மதுரையில் அடுத்தடுத்து இரு பெண்களிடம் 8 பவுன் நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை கலைநகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்த ஆதப்பன் மனைவி தேனம்மை (43). இவா் செக்கடி தெருவில் உள்ள யோகா மையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்றுள்ளாா். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் தேனம்மை அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டனா். சம்பவம் தொடா்பான புகாரின்பேரில் திருப்பாலை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை அனுப்பானடி டீச்சா்ஸ் காலனியைச் சோ்ந்த முருகேசன் மனைவி பானுமீனா (42). இவா் அப்பகுதியில் உள்ள பால்டிப்போவுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றாா். அப்போது அங்கு வந்த இருவா் பானுமீனா அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனா். புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT