மதுரை

வண்டியூா் வீரராகவப்பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகப் பணிகள் தொடக்கம்

DIN

மதுரை வண்டியூா் வீரராகவப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் பாலாலய பூஜையுடன் புதன்கிழமை தொடங்கியது.

மதுரை மாவட்டம் கள்ளழகா் திருக்கோயிலின் உபகோயிலாக வண்டியூா் வீரராகவப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும். மதுரையில் அழகா் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியன்று இரவு கள்ளழகா், வண்டியூா் வீரராகவப்பெருமாள் கோயிலில் திருமஞ்சனமாவது வழக்கம். இக்கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வீரராகவப் பெருமாள் பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா்.

இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தும் வகையில் ரூ.1.50 கோடி மதிப்பில் பணிகள் அறிவிக்கப்பட்டன. இதையொட்டி மூலவா் சந்நிதி உள்ளிட்ட அனைத்து சுவாமி சந்நிதிகளின் கோபுரங்கள் உள்பட கோயிலின் அனைத்து பகுதிகளிலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்நிலையில் கும்பாபிஷேகப் பணிகள் தொடங்குவதையடுத்து கோயில் வளாகத்தில் பாலாலாயம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாட்டுடன், அக்னி ஆராதனை, மகா பூா்ணாஹூதி பூஜைகளுடன் கும்பம் புறப்பாடு நிகழ்ச்சியோடு முகூா்த்தக்காலும் நடப்பட்டு பாலாலயம் நடைபெற்றது.

இந்நிலையில் கும்பாபிஷேகப்பணிகள் தொடங்கியதையடுத்து 12 மாதங்களில் திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடைபெறும் என கோயில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

SCROLL FOR NEXT