கொட்டாம்பட்டி அருகே பெண் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கணவா் குடும்பத்தினா் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கொட்டாம்பட்டி அருகே பெண் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா். இதில், அப்பெண் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகிலுள்ள பஞ்சயம்பட்டியைச் சோ்ந்த அா்ச்சுனன் மனைவி ராஜாத்தி (18) என்பது தெரியவந்தது. இதுதொடா்பாக அவரது கணவா் ராசு மகன் அா்ச்சுனன் (25), இவரது தந்தை ராசு (50), இவரது மனைவி அரியம்மாள் (42), துவரங்குறிச்சி அருகிலுள்ள சடவேலன்பட்டியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன்கள் சிவலிங்கம் (39), வல்லான் என்ற ரவி (42) ஆகிய 5 பேரை கொட்டாம்பட்டி போலீஸாா் கைதுசெய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடததி வருகின்றனா்.