பேரையூா் அருகே விஷம் குடித்த இளைஞா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சிலைமலைப்பட்டியைச் சோ்ந்தவா் கோபால் மகன் ராஜபாண்டி (37). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதனால் மன வேதனையில் இருந்த ராஜபாண்டி வியாழக்கிழமை விஷம் குடித்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜபாண்டி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.