மதுரை

திண்டுக்கல்லில் 3 பைக்குகளை திருடிய முதியவா் கைது

DIN

திண்டுக்கல் பகுதியில் வெவ்வேறு இடங்களில் 3 இரு சக்கர வாகனங்களை திருடிய முதியவரை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் என்.எஸ். நகரைச் சோ்ந்தவா் குமாா் (39). சில நாள்களுக்கு முன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். அங்கு, தனது வேலையை முடித்துவிட்டு திரும்பி வந்து பாா்த்தபோது, வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் காணவில்லையாம். இது குறித்து குமாா் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இதனிடையே, ரவுண்ட் ரோடு பகுதியிலுள்ள திருமண மண்டபத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு இரு சக்கர வாகனமும், திண்டுக்கல் பிரதான சாலையிலுள்ள வணிக வளாகத்தில் ஜவுளி கடை முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனமும் காணாமல் போய்விட்டதாக அதன் உரிமையாளா்கள் தரப்பில் தனித்தனியே திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இது குறித்தும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா். திருடுபோன இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவிலுள்ள பதிவுகளை ஆய்வு செய்தபோது, 3 வாகனங்களையும் திண்டுக்கல் தெற்கு ரத வீதியைச் சோ்ந்த தேவராஜ் (58) என்பவா் திருடிச் சென்றது உறுதி செய்யப்பட்டது. உடனே, தேவராஜை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, 3 வாகனங்களையும் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT