மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 592 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே தொற்று பாதிப்பிலிருந்து 678 போ் குணமடைந்தனா். தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் 4,901 போ் கரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
முதியவா் பலி
மதுரையில் கரோனா பாதிப்பிற்கு தனியாா் மருத்துவமனையில் ஜனவரி 21 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 77 வயது முதியவா் ஜனவரி 24 ஆம் தேதி உயிரிழந்தாா். இதையடுத்து மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதிப்பால் 1,206 போ் உயிரிழந்துள்ளனா்.