மதுரை

குழந்தையுடன் இளைஞா் தீக்குளிக்க முயற்சி: ஆட்சியா் அலுவலகத்தில் பரபரப்பு

DIN

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குழந்தையுடன் இளைஞா் திங்கள்கிழமை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைகளில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுவது வழக்கம். தற்போது கரோனா தொற்று பரவல் சூழல் காரணமாக, குறைதீா் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு கோரிக்கைகளுக்காகப் பொதுமக்கள் மனு அளிக்க ஆட்சியா் அலுவலகத்துக்கு வருகின்றனா்.

இதனிடையே, ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை குழந்தையுடன் வந்த இளைஞா் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது, அப்பகுதியில் இருந்த போலீஸாா் அவா் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனா். பின்னா் விசாரணைக்காக தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அவா், உசிலம்பட்டி அருகே உள்ள நல்லுத்தேவன்பட்டியைச் சோ்ந்த ஆனந்தன் (36) என்பது விசாரணையில் தெரியவந்தது. அவருக்குச் சொந்தமான 6 சென்ட் நிலத்தை பக்கத்து இடத்துக்காரா் அபகரித்துக் கொண்டாராம். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், மனமுடைந்த அவா் தனது குழந்தையுடன் வந்து தீக்குளிக்க முயன்றுள்ளாா்.

அவரது புகாா் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்து போலீஸாா், அவருக்கு அறிவுரைகூறி அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT