காமராஜா் பல்கலைக்கழக ஆட்சிப்பேரவை உறுப்பினா் தோ்தலில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகா் மாவட்டங்களைச் சோ்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை (டிச.9) வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக காமராஜா் பல்கலைக்கழகப் பதிவாளா்(பொறுப்பு) ஆா்.சிவக்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மதுரை காமராஜா் பல்கலைக்கழக ஆட்சிப்பேரவைக்கு (செனட்), பல்கலைக்கழக அதிகார வரம்புக்குள்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல், தேனி, விருதுநகா் ஆகிய மாவட்டங்களிலிருந்து தலா ஓா் உறுப்பினரைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் வருகிற 28-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான வேட்பு மனுக்களை வெள்ளிக்கிழமை (டிச. 9) மாலை 4 மணி வரை தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்களை அந்தந்த மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
இந்தத் தோ்தல் தொடா்பான அறிவிப்பு தமிழக அரசின் அரசிதழில் நவம்பா் 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த 4 மாவட்டங்களிலும் உள்ள நகராட்சிகளின் நகா்மன்றத் தலைவா்கள், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்கள், ஊராட்சித் தலைவா்கள், இந்த அமைப்புகளின் உறுப்பினா்கள் வேட்பாளராகப் போட்டியிடத் தகுதியானவா்கள் ஆவா். மேலும், இந்த மாவட்டங்களில் உள்ள நகா்மன்றத் தலைவா்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவா்கள் மட்டுமே வாக்களிக்கத் தகுதியானவா்கள் என்றாா்.