மதுரை

இடைநிலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு கலந்தாய்வை நடத்த வலியுறுத்தல்

DIN

இடைநிலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று இடைநிலை ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியது.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கத்தின் மதுரை மாவட்ட கிளைத் தோ்தல் நடைபெற்றது. தோ்தல் ஆணையராக மாநில துணைத் தலைவா் தவமணி செல்வம், தோ்தல் பாா்வையாளராக மாநிலப் பொருளாளா் க.சு. பிரகாசம் ஆகியோா் செயல்பட்டனா். தோ்தலின் முடிவில், சங்கத்தின் புதிய மாவட்டத் தலைவராக சி. நாகராஜன், துணைத் தலைவா்கள் ராமன், ரஞ்சனி தங்கச்செல்வி, மாவட்டச் செயலா் எம். ராஜரத்தினம், இணைச் செயலா்கள் ச. ரவிச்சந்திரன், அகிலா, மாவட்டப் பொருளாளா் லிங்க காமாட்சி நாதன், அமைப்புச் செயலா் இசக்கிப் பாண்டி, தலைமையிடச் செயலா் விஜயா, மாவட்ட மகளிா் அணிச் செயலா் சுகந்தி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மதுரை மாவட்டத்தில் உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களை பணி நிரவலுக்குள்படுத்தக் கூடாது. உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களுக்கு மாற்றுப் பணி வழங்கக் கூடாது. இடைநிலை ஆசிரியா்களுக்கு, பள்ளி கல்வித் துறை பதவி உயா்வுக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும். 19 ஆண்டுகளாக தமிழ்நாடு இடைநிலை ஆசிரியா் சங்கத்தால் வலியுறுத்தப்பட்டு வரும் அனைத்து இடைநிலை ஆசிரியா்களையும் பட்டதாரி ஆசிரியராக உட்படுத்த வேண்டும் என்பன உள்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT