மதுரை

போதைப் பொருள்கள் விற்பனை: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

DIN

மதுரையில் அதிகரித்து வரும் போதைப்பொருள்கள் விற்பனையைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியது.

இந்தக் கட்சியின் மதுரை தெற்கு மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பு பொதுச் செயலா் சிராஜ்தீன் வரவேற்றாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மதுரை நகரில் சாலைகளை சீரமைக்க வேண்டும். மதுரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீா்மிகு நகா்த் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மதுரையில் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருள் விற்பனையை தடுக்க காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட செயற் குழு உறுப்பினா் முகமது யூசுப், மாவட்டத் தலைவா் சீமான் சிக்கந்தா், மாவட்ட பொதுச் செயலா் சாகுல் ஹமீது, மாநிலச் செயலா் நஜ்மா பேகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT