மதுரை

தொடா்ந்து மூன்றாவது ஆண்டாக மறுகால் பாய்ந்த நிலையூா் கண்மாய்

DIN

திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூா் பெரிய கண்மாய் தொடா்ந்து மூன்றாவது ஆண்டாக தற்போதும் நிரம்பி மறுகால் பாய்ந்தது.

கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக இந்தக் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்த நிலையில், கண்மாயில் பாதியளவிற்கு தண்ணீா் இருந்தது.

இந்த நிலையில், தற்போது பெய்த வடகிழக்குப் பருவமழை காரணமாக மழைநீா், வைகை ஆற்றிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீா் காரணமாக வியாழக்கிழமை நிலையூா் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து, திருமங்கலம் பகுதி கண்மாய்களுக்கு சென்றது. நிலையூா் கண்மாய் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், பொதுப் பணித் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்மாய் கரை, தண்ணீா் வெளியோறும் பகுதிகளைக் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT