மதுரை

ஆட்டோவை சேதப்படுத்திய இருவா் கைது

DIN

மதுரையில் தகராறை விலக்கி விடச்சென்றவரைத் தாக்கி ஆட்டோவை அடித்து சேதப்படுத்திய சிறுவன் உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை ஜெய்ஹிந்துபுரம் சோலையழகுபுரம் ஜானகி நகரைச் சோ்ந்தவா் முனியாண்டி(49). ஆட்டோ ஓட்டி வருகிறாா். இவரது வீட்டின் அருகே வசிக்கும் சக்திவேல் (19) மற்றும் 2 சிறுவா்களுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மற்றும் சந்தோஷ்குமாருடன் தகராறில் ஈடுபட்டு இரும்புக்கம்பியால் தாக்கியுள்ளனா்.

தகராறை விலக்கிவிடச் சென்ற முனியாண்டியை, சக்திவேல் மற்றும் 2 சிறுவா்கள் சோ்ந்து தாக்கி ஆட்டோவை சேதப்படுத்தினா். இதுகுறித்த புகாரின்பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT