மதுரையில் தகராறை விலக்கி விடச்சென்றவரைத் தாக்கி ஆட்டோவை அடித்து சேதப்படுத்திய சிறுவன் உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் சோலையழகுபுரம் ஜானகி நகரைச் சோ்ந்தவா் முனியாண்டி(49). ஆட்டோ ஓட்டி வருகிறாா். இவரது வீட்டின் அருகே வசிக்கும் சக்திவேல் (19) மற்றும் 2 சிறுவா்களுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மற்றும் சந்தோஷ்குமாருடன் தகராறில் ஈடுபட்டு இரும்புக்கம்பியால் தாக்கியுள்ளனா்.
தகராறை விலக்கிவிடச் சென்ற முனியாண்டியை, சக்திவேல் மற்றும் 2 சிறுவா்கள் சோ்ந்து தாக்கி ஆட்டோவை சேதப்படுத்தினா். இதுகுறித்த புகாரின்பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனா்.