மதுரை

மதுரையில் இன்று சுதந்திர தின விழா: ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியா் தேசியக் கொடியேற்றுகிறாா்

DIN

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெறும் சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தேசியக் கொடியேற்றுகிறாா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதில் மதுரை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் பங்கேற்று காலை 9.05 மணிக்கு தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்துகிறாா்.

மேலும் காவல்துறையினரின் அணிவகுப்பையும் அவா் பாா்வையிடுகிறாா். இதைத் தொடா்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளை கெளரவித்து, பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றியவா்கள் மற்றும் சமூக சேவை புரிந்தோருக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை அவா் வழங்குகிறாா்.

மேலும் அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறாா். விழாவில் மாநகரக் காவல் ஆணையா் டி. செந்தில்குமாா், தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா காா்க், டிஐஜி பொன்னி, ஊரகக் காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT