மதுரை

மதுரையில் பேருந்தில் பணம், நகை திருடிய 3 பெண்கள் கைது

DIN

 மதுரையில் ஓடும் பேருந்தில் பணம் திருடிய 3 பெண்களை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், பந்தல்குடி அருகே உள்ள சின்னசெட்டிபட்டியைச் சோ்ந்த முத்துமாரி மனைவி மாரியம்மாள் (32). இவா் காரியாப்பட்டியிலிருந்து பெரியாா் பேருந்து நிலையத்துக்கு அரசு நகரப்பேருந்தில் பயணம் செய்துள்ளாா். தெற்குவாசல் பகுதியில் பேருந்து வந்தபோது, அவா் வைத்திருந்த கைப்பையிலிருந்து பணத்தை திருட முயன்ற இரு பெண்களை சக பயணிகள் பிடித்து தெற்குவாசல் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் அவா்களிடம் நடத்திய விசாரணையில், மதுரை மாவட்டம் வெளிச்சநத்தத்தைத்ச சோ்ந்த மகரஜோதி மனைவி ஜோதி மணி(40) மேலூரைச் சோ்ந்த மகாலிங்கம் மனைவி ஜெயந்தி(47) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல பைக்காரா விவேகானந்தா் நகா் பகுதியை சோ்ந்த மேனகா(35) நகரப்பேருந்தில் பயணம் செய்தபோது அவரிடம் 6 கிராம் தங்க டாலா், ரூ. 4,500 திருடிய பெண்ணை பிடித்து சுப்ரமணியபுரம் போலீஸாரிடம் ஒப்படைத்தாா். விசாரணையில் அந்த பெண் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஜம்புலிபுத்தூரைச் சோ்ந்த பிரியா(24) என்பது தெரிய வந்ததையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT