மதுரை ரயில்வே பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற, மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் பத்நாபன் அனந்த் முன்னாள் மாணவா்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினாா். மதுரை ரயில்வே கோட்ட ஊழியா் நல அதிகாரி சங்கரன், ரயில்வே பள்ளி தலைமை ஆசிரியை மாயா, ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியை விஜயலெட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.