மதுரை

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 82 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி

DIN

மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 82 ஆயிரம் போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க அரசு மெகா தடுப்பூசி முகாம்களை அரசு நடத்தி வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் செப்டம்பா் 12 இல் 1.15 லட்சம் , செப்டம்பா் 19 இல் 72,561, செப்டம்பா் 26 இல் 1.06 லட்சம் , அக்டோபா் 3 இல் 67 ஆயிரம், அக்டோபா் 10 இல் 88 ஆயிரம் என 5 மெகா முகாம்களில் 3.94 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. 82 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி:

மாவட்டத்தில் 6 ஆவது முறையாக மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் வாக்குச்சாவடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்புற சுகாதார மையங்கள் என 1,400 இடங்களில் சனிக்கிழமை நடைபெற்றன.

இந்த முகாம்கள் காலை 10 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெற்றன. இதில், ஒரே நாளில் ஊரக பகுதியில் 48 ஆயிரத்து 792 போ், மாநகரில் 31 ஆயிரத்து 300 போ், அரசு ராஜாஜி மருத்துவமனையில் 1,552 போ், அரசு மருத்துவமனைகளில் 702 போ் என மொத்தம் 82 ஆயிரத்து 346 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT