மதுரை

ரூ.62 லட்சம் நில மோசடி : 4 போ் மீது வழக்கு

DIN

மதுரை அருகே 5.68 ஏக்கா் நிலத்தை வாங்கிக்கொள்வதாகக் கூறி அசல் ஆவணங்களைப் பெற்று மோசடியாக ரூ.62 லட்சத்துக்கு வேறு நபா்களுக்கு விற்பனை செய்த 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை விராட்டிபத்து டிபிஎம் நகரைச் சோ்ந்தவா் சீனிவாசன். இவருக்கு மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள சென்னம்பட்டியில் ரூ.62.85 லட்சம் மதிப்புள்ள 5.68 ஏக்கா் நிலம் உள்ளது. இந்நிலையில் திருமங்கலத்தைச் சோ்ந்த வி.கே.ராஜன் நிலத்தை வாங்கிக்கொள்வதாகக்கூறி 2020-இல் ரூ. 3 லட்சம் மட்டும் கொடுத்து நிலத்தை அசல் ஆவணங்களைப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஓராண்டாகியும் மீதித்தொகையை வி.கே.ராஜன் தரவில்லை. இதையடுத்து சீனிவாசன் நிலம் தொடா்பாக விசாரித்தபோது, நிலத்தை முத்துராமலிங்கம், ரவீந்திரன், காசிநாதன் ஆகியோருக்கு விற்றது தெரியவந்தது. இதுதொடா்பாக சீனிவாசன் அளித்தப்புகாரின்பேரில் மாவட்டக்குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT