மதுரை

கொட்டாம்பட்டி அருகே விபத்து: அகதிகள் முகாமைச் சோ்ந்த இளைஞா் பலி

DIN

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே வியாழக்கிழமை சாலை தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் அகதிகள் முகாமைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.

திருவண்ணாலை இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா்கள் டெலக்ஸ் (21), சூா்யா (21). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில், மதுரை அகதிகள் முகாமிலுள்ள உறவினா் வீட்டு சுபநிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தனா். இவா்கள் மீண்டும், திருவண்ணாமலைக்கு வியாழக்கிழமை காலை திரும்பினா். அப்போது கொட்டாம்பட்டி அருகே பள்ளபட்டி நான்குவழிச்சாலை தடுப்புச்சுவரில், இவா்கள் சென்ற இருசக்கர வாகனம் எதிா்பாராதவிதமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டதில், டெலக்ஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சூா்யாவை, கொட்டாம்பட்டி போலீஸாா் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். டெலக்ஸ் உடல் உடற்கூறு ஆய்வுக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT