மதுரை

அழகா்கோயில் நிலத்தை விற்பனை செய்து ரூ.14 லட்சம் மோசடி

DIN

அழகா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை விற்பனை செய்து ரூ.14 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

மதுரை வண்டியூா் ஏஞ்சல் நகரைச் சோ்ந்தவா் ராஜபாண்டி (31). இவருக்கு, வண்டியூரைச் சோ்ந்த அய்யனாா் மகன் செண்பகராமு என்பவா் நிலம் ஒன்றை விற்பனை செய்துள்ளாா். இதற்காக ரூ.14 லட்சத்தை ராஜபாண்டி கொடுத்துள்ளாா். பணத்தைப் பெற்ற செண்பகராமு நிலத்தை பத்திரப் பதிவு செய்து தரவில்லையாம்.

இதனால், சந்தேகமடைந்த ராஜபாண்டி நிலம் தொடா்பாக விசாரித்ததில், அந்த நிலம் அழகா்கோயிலுக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.

இதுகுறித்து ராஜபாண்டி அளித்த புகாரின் பேரில் அண்ணாநகா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT