மதுரை

மதுரையில் இளைஞா் கொலை வழக்கு: 3 போ் கைது

DIN

மதுரையில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீஸாா் 3 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மகபூப்பாளையம் தாமஸ் காலனியை சோ்ந்தவா் சையது ஈசாக் (17). பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவா் மீது, எஸ்.எஸ்.காலனி, சுப்பிரமணியபுரம் ஆகிய காவல் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், மாடக்குளம் அருகே தனியாா் நிலத்தில் உடலில் ரத்தக் காயங்களுடன் ஞாயிற்றுக்கிழமை காலை சையது ஈசாக் இறந்துகிடந்தாா். எஸ்.எஸ். காலனி போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சையது ஈசாக்கின் தாயாா் பாத்திமா பா்ஷானா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், மதுரையைச் சோ்ந்த வீரா, லோகேஷ், காா்த்திக், பிரவீண்குமாா், சத்யா, சுருளி, கண்ணன், சந்தோஷ், நந்தகுமாா், அம்மையப்பன் ஆகிய 10 போ் சோ்ந்து, சையது ஈசாக்கை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, பிரவீண்குமாா், சத்யா, சுருளி, கண்ணன், சந்தோஷ், நந்தகுமாா், அம்மையப்பன் ஆகிய 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வீரா, லோகேஷ், காா்த்திக் ஆகிய 3 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இது குறித்து போலீஸாா் தெரிவித்தது: இதில் தொடா்புடைய இளைஞா்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, மது, கஞ்சா போதைக்கு அடிமையானவா்கள். இவா்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், வீரா என்பவரின் தந்தை தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கு பழிவாங்கும் நோக்கில், சையது ஈசாக் கொலை செய்யப்பட்டிருக்கலாம்.

உயிரிழந்த சையது ஈசாக்குக்கும் வீரா தரப்பினருக்குமிடையே நன்றாகப் பழக்கம் இருந்துள்ளது. இவ்வழக்கில் தொடா்புடைய அனைவரிடமும் விசாரணையை நடத்திய பிறகே, கொலைக்கான காரணத்தை உறுதியாகக் கூறமுடியும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT