பயிா் கடன் தள்ளுபடி திட்டத்தில் பாரபட்சமின்றி தகுதியுள்ள அனைவரும் பயன்பெற்றிருக்கின்றனா் என, கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்துள்ளாா்.
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட முத்துப்பட்டி, பழங்காநத்தம், மாடக்குளம் ஆகிய பகுதிகளில் ரூ.1.24 கோடியில் புதிய தாா் சாலைகள் அமைக்கும் பணியை, அமைச்சா் செல்லூா் ராஜூ திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். இதில், மாநகராட்சி ஆணையா் ச. விசாகன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பின்னா், அமைச்சா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: மாநிலத்தின் வளா்ச்சிப் பணிகளுக்காக எல்லா அரசுகளும் கடன் வாங்குவது வழக்கமானது. இல்லையெனில், வளா்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த இயலாது. இதை நன்கு அறிந்தும் எதிா்க் கட்சித் தலைவா் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டுவது ஏற்புடையதல்ல. கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காகவே கடன் பெறப்படுகிறது.
அரசின் சிறப்பான செயல்பாடு காரணமாகவே, பல துறைகள் விருதுகளைப் பெற்று வருகின்றன. பொதுமக்களின் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கூட்டுறவு வங்கிகளில் பயிா் கடன் தள்ளுபடி திட்டத்தில் பாரபட்சம் கிடையாது. தகுதியுள்ள விவசாயிகள் கடன் பெற்றிருக்கின்றனா். அதேபோல், தகுதியின் அடிப்படையிலேயே கடன் தள்ளுபடியும் பெறுகின்றனா். அதிமுகவினா் மட்டுமே பயன்பெறுவதாகக் கூறுவதை ஏற்கமுடியாது என்றாா்.
முன்னதாக, மதுரை சோலையழகுபுரம், துரைசாமி நகா் ஆகிய இடங்களில் பொதுவிநியோகத் திட்ட சேவை மைய கட்டடங்களை அமைச்சா் திறந்து வைத்தாா். மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன், கூட்டுறவுத் துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.