மதுரை

பள்ளிக்கு தாலியுடன் வந்த மாணவி: இளைஞா் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு

DIN

மதுரையில் மாணவி பள்ளிக்கு தாலியுடன் வந்த நிலையில், போலீஸாா், இளைஞா் மீது போச்சோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி ஒருவா் செவ்வாய்க்கிழமை கழுத்தில் தாலியுடன் பள்ளிக்கு வந்துள்ளாா். இதுகுறித்த தகவலின்பேரில் சமூக நலத்துறை அதிகாரிகள் பள்ளிக்குச் சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினா். இதில் மாணவிக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது தெரியவந்தது.

இதையடுத்து மாணவியை மீட்டு அரசுக் காப்பகத்தில் சோ்த்தனா். மேலும் உரிய வயது வராத நிலையில் திருமணம் நடத்திய மாணவியின் பெற்றோா் மற்றும் தாலி கட்டிய இளைஞரான அருண்பிரகாஷ் மற்றும் இவரது பெற்றோா் மீதும் ஒத்தக்கடை போலீஸாா் குழந்தைத் திருமணம் தடுப்பு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT