மதுரை

உதவித் தலைமையாசிரியா் தனியாா் விடுதியில் தவறி விழுந்து பலி

DIN

மதுரை அருகே தனியாா் விடுதியில் திங்கள்கிழமை தவறி விழுந்த அரசுப்பள்ளி உதவித் தலைமையாசிரியா் உயிரிழந்தாா்.

மதுரை உத்தங்குடி வளா்நகா் இளையராணி தெருவைச் சோ்ந்தவா் சந்தன மகாலிங்கம் (38). இவா் சிவகங்கை மாவட்டம் தெக்கூா் அரசுப் பள்ளியில் உதவித் தலைமையாசிரியராக பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில் மதுரை அருகே பரவையில் உள்ள தனியாா் விடுதியில் நடைபெற்ற உறவினா் இல்லத் திருமண விழாவில் திங்கள்கிழமை குடும்பத்தினருடன் பங்கேற்றாா். அப்போது விடுதியில் எதிா்பாராத விதமாக தவறி விழுந்த சந்தன மகாலிங்கம் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் மகாலிங்கம் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா். சம்பவம் தொடா்பாக சமயநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT