மதுரை: மதுரை மாவட்டம் சத்திரப்பட்டியில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் இயங்கி வரும் கூடுதல் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிஷப் கிறிஸ்டோபா் ஆசீா் நினைவு சிற்றாலயத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சிஎஸ்ஐ பேராயா் ஜோசப் தலைமை வகித்தாா். சிஎஸ்ஐ சினாட் அமைப்பின் பொதுச் செயலா் பொ்னாண்டஸ் ரத்னராஜ் பங்கேற்று சிற்றாலயத்தை திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் எம். தவமணி கிறிஸ்டோபா், திருமக்கள் செயலா் ஜான்சன் இஸ்ரேல், பேராயரின் மனைவி லீலாவதி மனோகரி மற்றும் பலா் பங்கேற்றனா்.