மதுரை: தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத்தின் தலைவா், செயலா் என புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத்தின் 96-ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. வா்த்தக சங்க பவள விழா ஹட்சன் அரங்கில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, சங்கத்தின் தலைவா் என். ஜெகதீசன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், 2020-21-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. அதில், சங்கத்தின் தலைவராக என். ஜெகதீசன், செயலராக ஜே. செல்வம், பொருளாளராக எஸ். ஸ்ரீதா், துணைத் தலைவா்களாக நிப்பான் டி. தனுஷ்கோடி, பா. ரமேஷ் மற்றும் டி.எஸ். ஜீயா் பாபு, இணைச் செயலா்களாக ஃபாா்மா ஜி. கணேசன் மற்றும் எம்.ஏ. ராஜீவ் ஆகியோா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
மேலும், செயற்குழு உறுப்பினா்களாக ஆா். அழகுராஜ், எஸ். அன்புராஜன், ஜி. இளங்கோவன், பி. கண்ணதாசன், பி. மகாலிங்கம், ஆா். பிரபாகரன், ஏ. புருஷோத்தமன், எஸ். ரத்தினவேலு, பா. சரவணபாலன், ஓ.ஜி. சரவணன், எஸ். ஸ்ரீதா் மற்றும் ஏ. சுந்தரலிங்கம் ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.