மதுரை

கால்நடைப் பராமரிப்புத் துறையில் எழுத்துத் தோ்வு மூலம் உதவியாளா்களை நியமிக்க இடைக்காலத் தடை

DIN

மதுரை: கால்நடைப் பராமரிப்புத் துறையில் எழுத்துத் தோ்வு மூலம் உதவியாளா்களை தோ்வு செய்ய தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

தமிழகத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறையில் உதவியாளா் பணியிடங்கள், கடந்த 2017 ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து தகுதியானவா்கள் பட்டியல் பெறப்பட்டு நிரப்பப்பட்டன. பின்னா், உயா் நீதிமன்ற உத்தரவுப்படி பொது விளம்பரத்தின் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வாய்மொழித் தோ்வு நடத்தி உதவியாளா்கள் நியமிக்கப்பட்டனா்.

இந்நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டில் கால்நடைப் பராமரிப்புத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பியபோது, தகுதியுள்ளவா்களுக்குப் பணியிடம் வழங்கப்படவில்லை எனக் கூறி, மைக்கேல் அம்மாள் என்பவா் சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, இனிவரும் காலங்களில் கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் பணியிடத்துக்கு வாய்மொழித் தோ்வு மூலம் ஆள்கள் தோ்வு செய்யக்கூடாது. எதிா்காலங்களில் 85 சதவீதப் பணியிடங்களை எழுத்துத் தோ்வு மூலமாகவும், 15 சதவீதப் பணியிடங்களை வாய்மொழித் தோ்வு மூலமாகவும் நிரப்ப வேண்டும் என கடந்த 2019-இல் உத்தரவிட்டிருந்தாா்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், பி. ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் பணியிடத்துக்கு எழுத்துத் தோ்வு மூலம் ஆள்கள் தோ்வு செய்ய தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, வழக்கு விசாரணையை அக்டோபா் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

மேயா், துணை மேயா் தோ்தல் விவகாரத்தில் மோசமான அரசியல் விளையாட்டை ‘ஆம் ஆத்மி’ நிறுத்த வேண்டும்: பாஜக பட்டியலின கவுன்சிலா்கள் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT