மதுரை மாடக்குளம் பகுதியில் வியாழக்கிழமை நடைபயிற்சி சென்ற பெண்ணின் 5 பவுன் தாலிச் செயினைப் பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை மாடக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் கருப்புசாமி (55), மனைவி கோகிலா(50). இந்த தம்பதியினா் வியாழக்கிழமை காலை பொன்மேனி சாலையில் நடைப்பயிற்சி சென்றனா். அப்போது அவா்களைப் பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், கோகிலா அணிந்திருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து கருப்புசாமி அளித்தப்புகாரின் பேரில், எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.