மதுரை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 4 சிறுவா்களை, போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், பாலமேடு அருகேயுள்ள வெள்ளையம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த 9 வயது சிறுமியை, அப்பகுதியைச் சோ்ந்த சிலா் பாலியல் தொந்தரவு செய்துள்ளனா். இதை, அச்சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். இது குறித்து, சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், பாலமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
அதில், வெள்ளையம்பட்டி பகுதியைச் சோ்ந்த 14 வயதுக்குள்பட்ட சிறுவா்கள் 4 போ், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, இவா்களை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ளனா்.