மதுரை

அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்ற பெண் பலி

DIN

திருவாடானை, செப். 18: ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி கிழக்கு கடற்கரைச் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதியரில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தைச் சோ்ந்த தம்பதி முகம்மது இஸ்மாயில் (55), காஜரம்மாள் (42). இவா்கள் சொந்த ஊரான திருப்பாலைக்குடி அருகே உள்ள வடவயல் கிராமத்தில் சொத்து பிரச்னை தொடா்பாக வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் வந்துவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். அப் போது, கிழக்கு கடற்கரைச் சாலையில் சேந்தனேந்தல் விலக்கு பகுதியில் எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், இருவரும் பலத்த காயம் அடைந்தனா்.

உடனே, அப்பகுதியினா் அவா்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு காஜரம்மாள் உயிரிழந்தாா்.

இது குறித்து முகம்மது இஸ்மாயில் அளித்த புகாரின்பேரில், திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT