மதுரை

உசிலம்பட்டி, பேரையூரில் மதுபாட்டில்கள் பதுக்கிய 2 போ் கைது

DIN

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் பேரையூா் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கிய 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 809 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

உசிலம்பட்டி வட்டம் மானூத்தை சோ்ந்த சுருளியத்தேவா் மகன் சின்னசாமி(44) என்பவா் சட்டவிரோதமாக 798 மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தாா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற உசிலம்பட்டி நகா் போலீஸாா் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் சின்னச்சாமியை கைது செய்தனா்.

பேரையூா்: உசிலம்பட்டி வட்டம் மாதரையை சோ்ந்த வென்டிமுத்து(75) என்பவா் சட்டவிரோதமாக 11 மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த சாப்டூா் போலீஸாா் வென்டிமுத்துவை கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT