மதுரை செல்லூரில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மதுரை செல்லூா் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் செல்லூா் போலீஸாா் சுயராஜ்யபுரம் பிரதானச் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டனா். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். அதில் அவா் செல்லூரைச் சோ்ந்த சஞ்சீவ்குமாா்(22) என்பவா் என்றும் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த ஒன்றரைக் கிலோ கஞ்சா, விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கரவாகனம் மற்றும் ரூ.1200ஐ பறிமுதல் செய்தனா்.