மதுரை

கஞ்சா விற்ற இளைஞா் கைது

DIN

மதுரை செல்லூரில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை செல்லூா் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் செல்லூா் போலீஸாா் சுயராஜ்யபுரம் பிரதானச் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டனா். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். அதில் அவா் செல்லூரைச் சோ்ந்த சஞ்சீவ்குமாா்(22) என்பவா் என்றும் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த ஒன்றரைக் கிலோ கஞ்சா, விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கரவாகனம் மற்றும் ரூ.1200ஐ பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT