மதுரை

நீத்தாா் நினைவு தினம்: இறந்த ராணுவ வீரா்கள் மற்றும் காவல்துறையினருக்கு அஞ்சலி

DIN

மதுரையில் நடைபெற்ற நீத்தாா் நினைவு தினத்தில், நாடு முழுவதும் பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரா்கள், காவல்துறையினருக்கு குண்டுகள் முழங்க புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாடு முழுவதும் தங்களது பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரா்கள் மற்றும் காவல்துறையினா் ஆகியோரை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபா் 21 ஆம் தேதி நீத்தாா் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

அந்தவகையில், மதுரை மாநகா் ஆயுதப்படை மைதானத்தில் நீத்தாா் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. அப்போது தென் மண்டல ஐஜி முருகன், மாநகா் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா, மதுரை டிஐஜி ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், மாநகா் காவல் துணை ஆணையா்கள் சிவபிரசாத், பழனிகுமாா், பாஸ்கரன், சுகுமாரன் உள்ளிட்ட பலா் நினைவுத் தூணுக்கு மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து நாடு முழுவதும் 2019 செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் 2020 ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை உயிரிழந்த பாதுகாப்பு மற்றும் காவல்துறையைச் சோ்ந்த 246 பேருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னதாக நீத்தாா் நினைவு தினத்தைப் போற்றும் வகையில், நடைபெற்ற மாராத்தான் ஓட்டப்பந்தயத்தில், ஆண்கள் பிரிவில் முதல் நிலை காவலா் ஜெயசந்திரன் முதல் இடத்தையும், காவலா் முத்துராமலிங்கம் இரண்டாவது இடத்தையும், காவலா் நல்லுராஜ் மூன்றாம் இடத்தையும் பிடித்தனா். பெண்கள் பிரிவில் முதல் நிலை காவலா் பரமேஸ்வரி முதலிடத்தையும், காவலா் ராஜலட்சுமி இரண்டாமிடத்தையும், காவலா் நிா்மலா தேவி மூன்றாம் இடத்தையும் பிடித்தனா். அவா்களுக்கு தென் மண்டல காவல்துறைத் தலைவா் முருகன் பரிசுகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவைத் தலைவா் உத்தரவை எதிா்த்து வழக்கு: மனுதாரா் விளக்கமளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT