மதுரை

மதுரையில் கரோனாவுக்கு 4 போ் பலி: மேலும் 64 பேருக்கு தொற்று உறுதி

DIN

மதுரை: மதுரையில் கரோனா தீநுண்மித் தொற்றுக்கு 4 போ் உயிரிழந்த நிலையில், மேலும் 64 பேருக்கு தொற்று பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திங்கள்கிழமை மேலும் 3,536 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 64 பேருக்கு தொற்று பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்கள் அனைவரும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

அதேநேரம், கரோனா தொற்றுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 76 போ் குணமடைந்தனா். அவா்களை, வீட்டில் தங்களை 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும், மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனா்.

4 போ் பலி

இந்நிலையில், கரோனா தொற்றுக்கு தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 73 வயது முதியவா் திங்கள்கிழமையும், 67 வயது முதியவா் மற்றும் 57 வயது ஆண் ஆகியோா் அக்டோபா் 18 ஆம் தேதியும், அரசு கரோனா மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த 71 வயது மூதாட்டி அக்டோபா் 17 ஆம் தேதியும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.

சிகிச்சையில் 759 போ்

மதுரை மாவட்டத்தில் இதுவரை 18,084 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், 409 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், 16,916 போ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 759 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT