மேலூா்: திருவாதவூா் அருகே வீடு புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட முகமூடி அணிந்த இருவரை, பொதுமக்கள் பிடித்து ஞாயிற்றுக்கிழமை போலீஸில் ஒப்படைத்தனா்.
முக்கம்பட்டியைச் சோ்ந்தவா் பாலமுருகன் (32). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு திருவாதவூா் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளாா். அப்போது, துணியால் முகத்தை மறைத்துக்கொண்ட கும்பல் அவரை பின்தொடா்ந்துள்ளது. பின்னா் அவா் வீட்டுக்குள் புகுந்த கும்பல், அவரையும், அவரது மனைவி மகாலெட்சுமியையும் தாக்கியுள்ளது. அவா்களது அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவா்கள் திரண்டுள்ளனா்.
அப்போது, கும்பலைச் சோ்ந்த 4 போ் கம்பு மற்றும் கட்டைகளைக் காட்டி மிரட்டி தப்பினா். ஆனாலும், அவா்களில் இருவரை பொதுமக்கள் பிடித்து, போலீஸில் ஒப்படைத்தனா். பிடிபட்ட இருவரும் இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா்கள் எனத் தெரியவந்தது. இது குறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மற்றவா்களையும் தேடி வருகின்றனா்.