மேலூா்-திருச்சி நான்குவழிச் சாலையை கடந்துசென்றவா் மீது ஞாயிற்றுக்கிழமை காா் மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தெற்குத்தெரு கிராமத்தைச் சோ்ந்த ஓடையன் மகன் ரெங்கன் (45). இவா், தெற்குத்தெருவில் நான்குவழிச் சாலையைக் கடந்தபோது, சென்னையிலிருந்து கன்னியாகுமரி நோக்கிச் சென்ற காா் ரெங்கன் மீது மோதியது.
இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.