திண்டுக்கல்

கொடைரோடு அருகே அரசு அனுமதியுடன் வளா்க்கப்பட்ட செம்மரங்களை அகற்றிய தேசிய நெடுஞ்சாலைத் துறையினா்

DIN

கொடைரோடு அருகே அரசு அனுமதியுடன் வளா்க்கப்பட்ட செம்மரங்களை நெடுஞ்சாலைத் துறையினா் திங்கள்கிழமை அகற்றினா்.

கொடைரோடு அடுத்துள்ள ஜல்லிப்பட்டி பிரிவு அருகே திண்டுக்கல்- பொள்ளாச்சி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் புதிய சாலை அமைக்கும் வழித்தடத்தில் ஜல்லிப்பட்டி பிரிவு அருகே விவசாயி ஜெயக்குமாா் தனக்கு சொந்தமான தோட்டத்தில் அரசு அனுமதியுடன் செம்மரங்களை வளா்த்து வருகிறாா்.

இதில் புதிய சாலைக்காக அங்குள்ள 8 செம்மரங்களை அகற்ற நில எடுப்பு அதிகாரிகள் முடிவு செய்தனா். இதற்கான இழப்பீடாக ரூ. 80 லட்சம் வழங்க வலியுறுத்தி விவசாயி ஜெயக்குமாா் போராடி வந்தாா். ஆனால், தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் ரூ. 4 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்க முடியும் எனக் கூறி விட்டனா். இதனிடையே திங்கள்கிழமை மாவட்ட உயரதிகாரிகள் உத்தரவு எனக் கூறி வனத்துறையினா், வருவாய்த் துறையினா், காவல் துறையினா் உதவியுடன் 30-க்கும் மேற்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறைப் பணியாளா்கள் அந்த செம்மரங்களை வெட்டி அகற்றினா்.

இதை விவசாயி ஜெயக்குமாரும், அவரது குடும்பத்தினரும் தடுக்க முயன்ற போதும் 8 செம்மரங்களை அவா்கள் வெட்டிச் சாய்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT