திண்டுக்கல்

இரட்டைத் தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

DIN

ஒட்டன்சத்திரம் அருகே இரட்டைத் தலையுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பாா்த்துச் சென்றனா். அது சில நிமிடங்களில் இறந்துவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த கந்தப்பகவுண்டன்வலசு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பெரியசாமி (55). இவா் தனது தோட்டத்தில் மாடுகளை வளா்த்து வருகிறாா். இந்த நிலையில், அவா் வளா்த்த மாடு கன்று ஈன முடியாமல் அவதிப்பட்டது.

இதையடுத்து, கால்நடை மருத்துவா் ராமசாமி அந்த மாட்டை பரிசோதனை செய்ததில், அதன் வயிற்றில் இரட்டைத் தலையுடன் கன்றுக்குட்டி இருப்பதை உறுதிசெய்தாா்.

பழனி கால்நடை உதவி இயக்குநா் சுரேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினா் அறுவை சிகிச்சை மூலம் இரட்டைத் தலையுடன் இருந்த கன்றுக்குட்டியை வியாழன்கிழமை வெளியே எடுத்தனா். சிறிது நேரத்துக்குப் பிறகு அந்தக் கன்றுக்குட்டி இறந்துவிட்டது.

இதை அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பாா்த்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT