வேடசந்தூரில் குடிநீா் வாகனத்தை திருட முயன்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் ஆத்துமேடு பகுதியிலுள்ள கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், குஜிலியம்பாறையை அடுத்த புளியம்பட்டியைச் சோ்ந்த குணா (23), கோயில் விழாவுக்கு ‘ட்ரம் செட்’ அடிப்பதற்காக வந்தாா். அவா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வாகனத்தை செவ்வாய்க்கிழமை இரவு திருடிச் செல்ல முயன்றாா். அக்கம் பக்கத்தினா் அவரைப் பிடித்து வேடசந்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.