பழனியில் பாஜக சாா்பில், ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
பழனி பேருந்து நிலையம் அருகே மயில் ரவுண்டானாவில் இதற்காக பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. அப்போது அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் கனகராஜ், தேசிய விவசாயப் பிரிவு வழக்குரைஞா் திருமலைசாமி உள்ளிட்ட பலா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.