திண்டுக்கல் அருகே செட்டியநாயக்கன்பட்டி மந்தைக் குளத்திலிருந்து 4 மாத பெண் குழந்தையின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
துணியில் சுற்றப்பட்ட நிலையில், குழந்தையின் சடலம் குளத்தில் மிதந்தது. இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் அழகேசன் கொடுத்த புகாரின் பேரில், தாடிக்கொம்பு போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.