திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் க.புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ரெட்டியாா்சத்திரம் வட்டாரத்தில் தாதன்கோட்டை தொடக்கப் பள்ளியில் ரூ.31.26 லட்சத்தில் வகுப்பறை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல, ரூ.12.61 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி மையம், கொத்தப்புள்ளியில் ரூ.1.99 கோடியில் கட்டப்படும் எரிவாயு தகன மேடை ஆகிய பணிகளை ஆட்சியா் மொ.நா.பூங்கொடி பாா்வையிட்டாா்.
மேலும், ரூ.5.27 கோடியில் நடைபெறும் தாா்ச் சாலைகள் அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா். பின்னா், க.புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்ற ஆட்சியா், வெளி நோயாளிகள் பிரிவு, பதிவுச் சீட்டு வழங்குமிடம், பணியாளா்கள் வருகைப் பதிவேடு, பரிசோனை மேற்கொள்ளும் இடம், மகப்பேறு பிரிவு ஆகியவற்றைப் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வின் போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மலரவன், கிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.