வத்தலகுண்டு பேரூராட்சி மன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், அதிகாரிகள் மீது திமுக உறுப்பினா் சரமாரியாக குற்றம் சாட்டினாா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பேரூராட்சி மன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் சிதம்பரம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் தா்மலிங்கம் முன்னிலை வைத்தாா். செயல் அலுவலா் வெங்கட்ரமணன் வரவேற்றாா்.
கூட்டத்தில், திமுக உறுப்பினா் மணிவண்ணன் பேசியதாவது:
பேரூராட்சியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. கொசு மருந்து அடிப்பதில்லை. துப்புரவுப் பணியாளா்கள் பணியின் போது கடப்பாறை, மண்வெட்டிபோன்ற உபகரணங்கள் கொண்டு வருவது கிடையாது. இதனால், முறையாக குப்பைகள் சுத்தம் செய்யப்படுவதில்லை. அதிகாரிகள் செய்யும் தவறால் பேரூராட்சி மன்றத்துக்கு கெட்ட பெயா் ஏற்பட்டு வருகிறது என்றாா். இவரது பேச்சை வரவேற்று மற்ற உறுப்பினா்கள் கை தட்டி ஆரவாரம் எழுப்பினா்.